சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது ஆனது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் காலால் இயக்கப்படும் ஒரு மின் தூக்கியைச் செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளது.
இது இந்தியாவிலேயே இம்மாதிரியில் முதல் முறையிலான மின் உயர்த்திப் பொறிநுட்பமாகும்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி டெல்லியில் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் இந்திய மையத்தைத் திறந்து வைத்துள்ளார்.
இது காகிதமற்ற முறையில் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தித் தருகின்றது.
ஆர்.ஸ்ரீலேகா கேரளாவின் முதல் பெண் தலைமைக் காவல்துறை இயக்குனராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜெனீவாவுக்கு வருகை தந்ததை நினைவில் கொண்டு சுவிட்சர்லாந்து அரசானது மே 26 ஆம் தினத்தை அறிவியல் தினமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கார்மென் ரெய்ன்ஹார்ட் என்பவர் இரண்டு வருடக் காலத்திற்கு உலக வங்கியின் துணைத் தலைவராகவும் அதன் தலைமைப் பொருளாதார நிபுணராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் செல்வந்தர் பட்டியல் 2020 என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
அறிவியலாளர் சர் ஜேம்ஸ் டைசன் முதல் முறையாக சண்டே டைம்ஸ் செல்வந்தர் பட்டியல் 2020 என்ற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச நடவடிக்கை தினம் என்பது 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
இது மகப்பேறு உரிமைகளுக்கான பெண்களின் உலகளாவிய வலையமைப்பு என்ற அமைப்பால் (WGNRR - Women’s Global Network for Reproductive Rights) ஒருங்கிணைக்கப் படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய மின்சார விமானமான செஸ்னா கேரவன் அதன் முதல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளது.
இந்த மின்சார விமானத்தின் பொறி இயந்திரம் (என்ஜின்) மேக்னிக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸின் பத்திரிக்கையின் வருடாந்திர பட்டியலின் படி சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக உலகின் அதிக சம்பளம் பெறும் ஒரு தடகள விளையாட்டு வீரரராக குறிப்பிடப் பட்டுள்ளார்.
ஜப்பானின் நவோமி ஒசாகா என்பவர் அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரராக உருவெடுத்துள்ளார். தனது சக டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை முந்திய முதல் பெண் விளையாட்டு வீரர் இவர் ஆவர்.
ரஷ்யா அணுசக்தியால் இயங்கும் தனது ஸ்கிஃப் என்ற ஏவுகணையைச் சோதனை செய்து வருகிறது. இது 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.
இது உலகின் மிகப்பெரிய அழுக்கு “சர்வநாசகார குண்டு” (டூம்ஸ்டே - உலகத்தை முடிவிற்குக் கொண்டு வரும் நாள்) என்று அழைக்கப் படுகிறது.
உலக செரிமான சுகாதார தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 29 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
2020 ஆம் ஆண்டுப் பிரச்சாரத்தின் கருப்பொருள் ஆனது "குடல் நுண்ணுயிர்க் கட்டு (Gut Microbiome): ஓர் உலகளாவியப் பார்வை" என்பதாகும்.