சமீபத்தில் உலக வங்கியானது உலகப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை, 2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வளர்ந்து வரும் சந்தை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
மத்திய அரசானது புதிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கையின் உருவாக்கத்திற்காக ஆலோசனை செயல்முறைகளைத் தொடங்கி உள்ளது. இது இந்த வரிசையில் 5வது கொள்கையாகும்.
இந்தச் செயல்முறையானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய அரசிற்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவற்றினால் இணைந்து கூட்டாகத் தொடங்கப்பட்டுள்ளது.
“LGBTQAI+” பணியாளர்களின் சேர்க்கையை ஊக்கப் படுத்துவதற்காக, மஹிந்தரா லாஜிஸ்டிக்ஸ் (போக்குவரத்து) நிறுவனமானது ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது செயல்திறன் மிக்க மக்களைப் பணியில் அமர்த்துதலையும் அதே பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கான பலன்களை நீட்டித்தலையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய துருவ மற்றும் கடல் ஆராய்ச்சி மையமானது 2021 ஆம் ஆண்டில் அமெரி பனித் தட்டு எல்லையானது 2016 ஆம் ஆண்டின் நிலையில் 24% அதிகரிக்கும் என்றும் 2026 ஆம் ஆண்டில் மேலும் அது 24% விரிவடையும் என்றும் கணித்து உள்ளது.
அமெரி பனித்தட்டு என்பது அண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வடிகால் படுகைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான கிரண்ஜீத் கவுர் என்பவர் பரிசோதனையில் தடை செய்யப் பட்ட ஒரு பொருளை (எனோபோசார்ம்) உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதனால், உலகத் தடகளப் போதை மருந்து தடுப்பு அமைப்பினால் 4 ஆண்டுக் காலத்திற்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜீ மற்றும் மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா ஆகியோர் நெடுந் தொலைவுகளில் வாழும் விளையாட்டு வீரர்களுக்கு ஆன்லைன் (நிகழ்நேர) பயிற்சி மற்றும் அது குறித்தக் கல்வியை வழங்குவதற்காக கேலோ இந்தியா மின்னணு - பாதசாலா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தத் திட்டமானது சமீபத்தில் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுடன் இணைந்து இந்திய விளையாட்டு ஆணையத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.