சமீபத்தில் கேரள மாநில அரசானது “முதல் மணி” (First Bell) என்ற ஒரு மெய்நிகர் பள்ளி வகுப்பு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநில அமைச்சரவையானது “பந்தே உத்கல் ஜனனி” என்ற பாடலுக்கு மாநிலப் பாடல் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இது கண்டகபி லட்சுமிகாந்த் மோகபத்ரா என்பவரால் எழுதப்பட்ட ஒரு தேசப் பற்று மிக்கக் கவிதையாகும்.
மேற்கு வங்காள மாநிலமானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக அம்மாநிலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்களுக்காக வேண்டி “கர்மபூமி” என்ற ஒரு வேலைவாய்ப்புத் தளத்தைத் தொடங்கி உள்ளது.
தெலுங்கானாவில் ஹைதராபாத் நகரக் காவல் துறையானது “இவள் மரியாதை, சமத்துவம் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் மூலம் வெல்வாள்” (STREE - She Triumphs through Respect, Equality, and Empowerment) என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இது குடும்ப வன்முறை மற்றும் கொடுமைப்படுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உதவி செய்வதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 18 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
வரலாற்று அறிஞரான தின்யார் படேல் “நௌரோஜி : இந்திய தேசியவாதத்தின் முன்னோடி” என்ற ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
கோவிட் – 19 நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் அணுக (வாங்க) இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த முன்னுரிமை அடிப்படையிலான உள்ளூர்ச் சந்தையானது “தடுப்பு மருந்து மீதான தேசிய வாதம்” என்று அழைக்கப்படுகின்றது.