ஆர்ஐசி/RIC (ரஷ்யா – இந்தியா – சீனா / Russia – India - China) நாடுகளின் சந்திப்பானது இரண்டாம் உலகப் போரின் 75வது நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக நடத்தப் பட்டது.
பதஞ்சலி நிறுவனமானது “கொரொனில்” “சவசரி வாத்தி” மற்றும் அனு தைலம் என்ற தனது ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மருந்தின் மூலம் கோவிட் – 19 நோய்த் தொற்றிற்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்று அந்நிறுவனம் உரிமை கோருகின்றது.
கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக ஹஜ் புனித யாத்திரையானது “குறைந்த அளவிலான நபர்களைக் கொண்டே நடத்தப்படும்” என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
மெக்கா புனித நகரில் நடத்தப்படும் ஹஜ் புனித யாத்திரையானது முஸ்லீம்கள் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றது.
அமெரிக்க அரசானது அந்த நாட்டுப் பணிகளைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை “பச்சை அட்டை” மற்றும் புலம்பெயர்ந்த பணி நுழைவு இசைவை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.