PREVIOUS
சையத் அலி ஷா கிலானி என்பவர் காஷ்மீரில் மிகப்பெரிய பிரிவினைவாத அரசியல் முன்னணிக் கட்சியான ஹுரியத் மாநாட்டுக் கட்சியிலிருந்து வெளியேறி உள்ளார்.
இந்தியப் பிரதமர் புலம்பெயர்ந்த மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக வேண்டி 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை நீட்டித்துள்ளார்.
மத்திய அரசானது ஒரு தேசம், ஒரு குடும்ப அட்டை என்பதின் கீழ் ஒடிசா, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மேலும் 3 மாநிலங்களை இணைத்துள்ளது.
நிரலாக்கம் மற்றும் தரவு அறிவியல் துறையில் உலகின் முதலாவது நிகழ்நேர இளங்கலை அறிவியல் (ஆன்லைன் பி.எஸ்.சி) பட்டப் படிப்பானது தயார் செய்யப் பட்டு, மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் வழங்கப்பட இருக்கின்றது.
மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புச் செய்தி மடலின் முதலாவது பதிப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
இந்தச் செய்தி மடலின் பெயர் “மத்சயா சம்பாதா” என்பதாகும்.
ஸ்விகி நிறுவனமானது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து “ஸ்விகி நாணயம்” (Swiggy Money) என்ற தனது சொந்த டிஜிட்டல் பணப் பையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொழிற்துறையின் முதலாவது உடனடி டிஜிட்டல் பணப் பையாகும்.
இந்தியாவைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய நிதின் மேனன் என்பவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் சிறப்பு நடுவர் குழுவின் இளம் உறுப்பினராக உருவெடுத்துள்ளார்.
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவரான ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் மற்றும் சுந்தரம் ரவி ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது நபராக இவர் இந்தக் குழுவில் இணைந்துள்ளார்.