எச்சிஎல் (HCL)தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சிவ் நாடார் விலகியுள்ளார்.
அவருடைய மகளான ரோஷ்னி நாடார் மல்கோத்ரா இந்நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பானது பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாதக் குழுவான “தெஹ்ரிக்-இ-தலிபானின் தலைவரான முப்தி நூர் வாலி மெக்சூத்” என்பவரை ஒரு சர்வதேசத் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.
அசாம் மாநில அரசானது பிளாஸ்மா நன்கொடையாளர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பிரிவான அவசரகால இந்தியக் கணினி எதிர்வினைக் குழுவானது இணையவழியிலான அச்சுறுத்தல்களைக் கையாளுவதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது சர்வதேச வர்த்தக இயந்திரக் கழகத்துடன் (IBM - International Business Machines Corporation) இணைந்து உயர் கல்விப் பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்தை இணைப்பதாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கபோன் ஆனது தனது முதலாவது பெண் பிரதமராக ரோஸ் கிறிஸ்டியன் ஒசுகா ரபான்டா என்பவரை நியமித்துள்ளது.