இந்தியாவின் முதலாவது பொது மின்சார வாகன மின்னேற்று நிலையமானது புது தில்லியில் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
கைபேசிச் செயலிகளிலிருந்து கடவுச் சொல் மற்றும் கடன் அட்டை விவரங்கள் போன்ற தரவுகளைத் திருடும் “பிளேக் ராக்” என்ற ஒரு புதிய ஆண்ட்ராய்டு தீம்பெருளானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தென்கொரியாவானது தனது முதலாவது இராணுவத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான அனாசிஸ்-II என்ற கோளை ஏவியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசானது பட்டியல் சாதியினருக்காக ஒரு முழு அளவிலான வளர்ச்சித் திட்டமான “நவீன் ரோஜ்கர் சத்ரி யோஜனா” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
தில்லி அரசானது ரேசன் பொருட்கள் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுப் பயனடையும் வகையில் பயனாளிகளுக்கு உதவுவதற்காக வேண்டி முக்கிய மந்திரி கர் கர் ரேசன் யோஜனா என்ற ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
டாடா குழுமத் தலைவரான நடராஜன் சந்திரசேகரன், லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவரான ஜிம் டாய்சிலேட் ஆகியோர் அமெரிக்க-இந்திய வர்த்தக ஆணையத்தின் உலக தலைமைத்துவ விருது – 2020 என்ற விருதினைப் பெற இருக்கின்றனர்.
துரந்தோ சர்வதேசத் திரைப்படத் திருவிழாவானது (TIFF - Toronto International Film Festival) கேட் வின்ஸ்லெட் என்பவர் 2020 ஆம் ஆண்டின் TIFF கௌரவ நடிகர் விருதைப் பெறுவார் என்று அறிவித்துள்ளது.