ஐக்கிய அரபு அமீரகமானது அரபுக் கடற்கரையோரத்தில் உள்ள அபுதாபியில் “பாரக்” என்ற தனது முதலாவது அணுக்கரு உலையைத் தொடங்கியுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் ”ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை” என்ற திட்டத்தை மேலும் 4 மாநிலங்கள், மணிப்பூர், நாகாலாந்து, உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றிற்கு விரிவுபடுத்தியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்புமிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது சவுதியின் ஆரம்கோ நிறுவனத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி உள்ளது.
இந்தியா ஆகஸ்ட் 02 ஆம் தேதியன்று சர்வதேசத் தோழமை தினத்தைக் கொண்டாடியது.