விருதுநகர் மாவட்டத்தின் நாரணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியரான கருணைதாஸ் அவர்கள் மைக்ரோசாப்ட்டின் சர்வதேச சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அதே போன்று நாரணாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியானது மைக்ரோசாப்டினால் சிறந்த பள்ளியாக (மைக்ரோசாப்ட் கண்காட்சிப் பள்ளி) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
ராமச்சந்திர குஹா அவர்கள், “கிரிக்கெட்டின் காமன்வெல்த்: மனித இனத்திற்குத் தெரிந்த மிகவும் நுட்பமான மற்றும் அதிநவீன விளையாட்டுடன் ஒரு வாழ்நாள் ரீதியிலான அன்பு நிலை” (The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind) என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
டிஆர்டிஓ அமைப்பானது தற்போதைய மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் போர்ச் சூழல் தேவைகளுக்கு வேண்டி தனது 52 ஆய்வகங்களைச் சீரமைப்பதற்காக V. ராமகோபால் ராவ் என்பவரது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு குழுவானது 2008 ஆம் ஆண்டில் P ராமாராவ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.