முழுவதும் சூரிய ஒளியால் செயல்படுத்தப்படும் முதலாவது விமான நிலையமாக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI - Airports Authority of India) புதுச்சேரி விமான நிலையம் உருவெடுத்துள்ளது.
பெரு நகர மும்பை மாநகராட்சியின் மாநகராட்சி ஆணையரான இக்பால் சிங் சஹல் என்பவர் “2020 ஆம் ஆண்டின் உலகளாவிய கோவிட் மீது போர் தொடுப்பவர்” என்ற விருதால் கௌரவிக்கப்பட்டார்.
தில்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா அவர்கள் வரவேற்பறை அல்லது காபி-மேசைப் புத்தகமான “பாபு : மறக்க முடியாதவர்” (coffee-table book titled“Babu – The Unforgettable”) என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய விஷ்ணு சிவராஜ் பாண்டியன் என்பவர் சர்வதேச ஆன்லைன் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பின் 5வது பதிப்பில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI - Securities and Exchange Board of India) ஒரு முழு நேர உறுப்பினராகஇருக்கும் மாதாபி பூரி பச் என்பவரின் பதவிக் காலமானது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
SEBI-யின் முழு நேர உறுப்பினராக இருக்கும் முதலாவது பெண் இவராவார். மேலும் செபியின் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தனியார் துறையைச் சேர்ந்த முதலாவது நபரும் இவராவார்.