TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2020 1397 days 613 0
  • தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஒரு நேரடி நுழைவு வசதியானது மத்தியக் கப்பல் போக்குவரத்திற்கான இணை அமைச்சர் மற்றும் இரசாயனங்கள் – உரங்களுக்கான மத்திய இணை அமைச்சரான மன்சுக் மான்டவியா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • சத்தீஸ்கர் மாநிலச் சட்டமன்றமானது மத்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் அவர்கள் பரம்பரா தொடர் 2020 – தேசிய இசை மற்றும் நடனத் திருவிழாவின் மெய்நிகர் பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
    • இது ஐக்கிய நாடுகளுடன் இணைந்து நாட்டியத் தரங்கினி என்ற அமைப்பால்  ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் தேசியத் தலைநகர்ப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றுத் தரத்தின் சிறந்த  மேலாண்மைக்காக வேண்டி ஒரு காற்றுத் தர ஆணையத்தை அமைப்பதற்காக அவசரச் சட்டம் ஒன்றை பிரகடனம் செய்து உள்ளார்.
  • புதுச்சேரி அரசானது அந்த ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க முன் மொழிந்துள்ளது.
  • 'என் தோழி' என்ற ஒரு திட்டமானது அதிவேக (எக்ஸ்பிரஸ்) இரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக தெற்கு இரயில்வே மண்டலத்தின் சென்னைப் பிரிவில் இரயில்வே பாதுகாப்புப் படையால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
  • கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டி வங்க தேச அரசானது ‘முகமூடி இல்லையேல் சேவை இல்லை (no mask, no service) என்ற கொள்கையை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்