2021 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கு வரவிருந்த இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து உள்ளார்.
மதச் சுதந்திர மசோதா-2020 என்ற ஒரு மசோதாவை ஓர் அவசர சட்டமாக பிரகடனப் படுத்த வேண்டி மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசமும் இமாச்சலப் பிரதேசமும் இதே போன்ற சட்டங்களை இயற்றியுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசம் நாளானது ஒரு மாநில அரசுப் பொது விடுமுறையாக அளிக்கப் படும் என்று அறிவித்து உள்ளார்.