விவசாயிகளின் போராட்டங்களை அரசாங்கம் கையாளுவதை விமர்சித்த உச்ச நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதை மறு அறிவிப்பு ஒன்றை அறிவிக்கும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
51வது சர்வதேச திரைப்பட விழாவில், வங்க தேசமானது கவனம் செலுத்தப் படும் ஒரு நாடாக இருக்கும்.
இது கோவாவில் நடத்தப் படும்.
பிரேசிலுக்கு கோவாக்சின் மருந்தினை வழங்குவதற்காக பிரிசீசா மெடிகமெண்டோஸ் என்ற ஒரு நிறுவனத்துடன் (Precisa Medicamentos) பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலுக்குத் தீர்வு காண வேண்டி எட்டு அம்ச நிகழ்ச்சி நிரல் ஒன்றை வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் முன்மொழிந்து உள்ளார்.
‘1373 ஆம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச ஒத்துழைப்பு’ குறித்த UNSC அமைப்பின் பொது விவாதத்தில் அவர் இதை முன்மொழிந்தார்.
10 பயிற்சி விமானங்கள் மற்றும் 83 தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
தேஜஸ் விமானமானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்ட ஒரு நான்காம் தலைமுறை இலகு ரக போர் விமானமாகும்.