பெண்கள் 2022 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ படைப் பிரிவில் விமானிகளாக சேர்க்கப் படவுள்ளனர்.
தற்பொழுது வரை, பெண்கள் விமானப் படைப் பிரிவில் அலுவலகப் பணிகளையே (விமானி தவிர மற்ற பணிகள்) கவனித்து வந்தனர்.
இந்திய இராணுவமானது ”சுவிட்ச்” எனப்படும் அதிக உயர வகையிலான ஆளில்லா குட்டி விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக ”ஐடியாபோர்ஜ்” என்ற ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியா விடுதலையானதிலிருந்து தற்பொழுது வரலாற்றில் முதன்முறையாக, 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது கோவிட்–19 நோய்த் தொற்றின் காரணமாக காகிதமற்ற முறையில் தயாரிக்கப்பட உள்ளது.
பொதுவாக, நிதிநிலை அறிக்கையானது 100 பணியாளர்கள் ஏறத்தாழ 15 நாட்கள் ஒருங்கிணைந்து அச்சிடப்பட்டுத் தயாரிக்கப்படும்.
பிரதமர் அவர்கள் சென்னையிலிருந்து குஜராத்தில் உள்ள கேவாடியாவிற்கு வாராந்திர இரயில் சேவை ஒன்றைத் தொடங்கி வைத்தார்.
பசுமைக் கட்டமைப்புச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதலாவது இரயில் நிலையம் குஜராத்தில் உள்ள கேவாடியா இரயில் நிலையமாகும்.