அமெரிக்காவில் பதவியிலிருந்து வெளியேறும் டிரம்ப் அரசாங்கமானது உய்கூர் முஸ்லீம்களுக்கு எதிரான சீனாவின் கொடுமைகளை ”இனப் படுகொலையாக” அறிவித்துள்ளது.
உய்கூர்கள் சீனாவின் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 55 இன சிறுபான்மையினர்களில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டுள்ளனர். மேலும் இவர்கள் வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கூர் தன்னாட்சிப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவானது கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசிகளை மியான்மர், பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத் தீவுகள் மற்றும் செசல்ஸ் ஆகிய 6 நாடுகளுக்கு விநியோகிக்க உள்ளது.
கோவேக்ஸின் ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக்கினால் உருவாக்கப்பட்ட ஒரு உள்நாட்டுத் தடுப்பூசியாகும். கோவிஷீல்டு ஆனது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்றது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள செமேரு என்ற ஒரு எரிமலையானது சமீபத்தில் வெடித்துச் சிதறியது.
பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி ஆகிய வங்கிகள் உள்நாட்டு முறைசார் முக்கியமான வங்கிகளாக தொடர்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
”அப்துல் கலாம் – நினைவுகளுக்கு மரணமில்லை” என்ற புத்தகமானது மறைந்த குடியரசுத் தலைவரின் உடன் பிறந்தோர் மகளான ஏ பி ஜே எம்நசீமா மறைக்காயர் அவர்களால் எழுதப் பட்டது.
மகாராஷ்டிரா மாநில அரசானது நாக்பூரில் உள்ள கோர்வாடா சர்வதேச உயிரியல் பூங்காவை ”பாலாசாஹேப் தாக்கரே கோர்வாடா சர்வதேச உயிரியல் பூங்கா” என்று மறு பெயரிட்டுள்ளது.