மேகாலயாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் மாநிலத்தின் தேர்தல்களில் தகவல் தொழில்நுட்பச் செயலிகளை அறிமுகப்படுத்தியதிற்காக வேண்டி ஒரு சிறப்பு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது ‘தேசிய அளவிலான சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகள் – 2020’ என்ற விருதிற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
பிராண்ட் நிதியியல் அறிக்கையின்படி, டாடா ஆலோசக நிறுவனமானது (TCS) உலக அளவில் மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகத் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் TCS நிறுவனத்திற்குப் பிறகு, அசென்சர் மற்றும் ஐபிஎம் ஆகியன உள்ளன.
ஐந்தாம் தலைமுறைச் சேவையின் நிகழ்நேரச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட நாட்டின் முதலாவது தொலைத் தொடர்புச் செயல்பாட்டு நிறுவனம் பாரதி ஏர்டெல் ஆகும்.
இந்த நிகழ்நேரச் சோதனையானது ஐதராபாத் நகரில் உள்ள வணிக ரீதியான அமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவானது ஜனவரி 27 அன்று 3 ரஃபேல் போர் விமானங்களைக் கொண்ட மூன்றாவது தொகுதியைப் பெற்றுள்ளது.