February 6 , 2021
1298 days
764
- தேசிய சுகாதார ஆணையமானது ஆர்எஸ் சர்மா என்பவரை ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் ஒரு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
- மேலும் இது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்றும் அழைக்கப் படுகின்றது.
- 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 அன்று இந்தியப் பிரதமர் அவர்கள் சௌரி சௌரா நிகழ்வின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகக் தொடங்கி வைத்தார்.
- மேலும் இவர் இந்த நூற்றாண்டு விழாவிற்காக வேண்டி ஒரு பிரத்தியேக அஞ்சல் தலையையும் வெளியிட்டுள்ளார்.
- லார்சன் & டூப்ரோ நிறுவனம் ஆனது தேசிய அதிவேக இரயில் கழக நிறுவனத்திடம் இருந்து மும்பை அகமதாபாத் புல்லட் இரயில் திட்டத்தின் ஒப்பந்தத்தைப் பெற்று உள்ளது.
- தமிழ்நாடு அணி பரோடா அணியை வீழ்த்தியதன் மூலம் 2வது சையத் முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.
Post Views:
764