எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ என்பவரின் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு இந்திப் புனைவுக் கதையான “Tomb of Sand” (மணல் கல்லறை) என்ற ஒரு புத்தகமானது சர்வதேசப் புக்கர் பரிசுக்காக பட்டியலிடப்பட்ட 13 புத்தகங்களில் ஒன்றாகும்.
இந்த மதிப்புமிக்க இலக்கியப் பரிசின் நீண்டகாலப் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தி மொழிப் புனைவுக் கதை இதுவாகும்.
இந்தப் புத்தகமானது, முதலில் ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற பெயரில் வெளியிடப் பட்டது.
இது டெய்சி ராக்வெல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.