TNPSC Thervupettagam

TrailGuard AI அமைப்பு

February 20 , 2025 3 days 28 0
  • ஒடிசா மாநிலத்தின் சிமிலிபால் புலிகள் வளங்காப்பகத்தில், அதன் காடுகளுக்குள் வேட்டையாடுபவர்கள் மற்றும் வன விலங்குகளின் நடமாட்டம் பற்றிய சில நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்புகின்ற, ஒரு செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்பட்ட 100 முதல் 150 புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • அவை மிகவும் ஒரு இயல்பான நிலையில் குறைந்த ஆற்றல் பயன்பாட்டு முறையில் இயங்குகின்றன ஆனால் அவை நடமாட்டத்தை கண்டறிந்து புகைப்படத்தை எடுக்கும் போது உயர் ஆற்றல் பயன்பாட்டு முறைக்கு மாறுகின்றன.
  • அந்தப் புகைப்படக் கருவியானது பின்னர் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்டறிதலை மேற்கொள்கிறது அதாவது படத்தில் உள்ள 'விலங்குகள்', 'மனிதர்கள்' மற்றும் 'வாகனங்கள்' போன்ற பல்வேறு பொருள்களை வேறுபடுத்துவதற்காக என்று அதனுள் உள்ள சில்லுகளைப் பயன்படுத்துகிறது.
  • செயற்கை நுண்ணறிவு தேவையான சூழலில் ஒரு ஒளிப்படக் கருவியுடன் இணைக்கப் பட்ட தகவல் தொடர்பு அமைப்பைப் பயன்படுத்தி சுமார் 30 - 40 வினாடிகளில் ஒரு புகைப்படத்தினை இறுதிப் பயனருக்குத் தன்னியக்கமாக அனுப்புகிறது.
  • TrailGuard AI ஆனது, சிமிலிபாலில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு வேண்டி கடந்த 10 மாதங்களில், 96 வேட்டையாடுபவர்களைக் கைது செய்து, 86க்கும் மேற்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்ற உதவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்