TNPSC Thervupettagam

ULFA அமைதி ஒப்பந்தம்

January 4 , 2024 197 days 196 0
  • அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) அமைப்பானது, இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பானது, 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற அயலவர்களுக்கு (வெளி மாநிலத்தவர்) எதிரான இயக்கத்தின் போது தொடங்கப் பட்டது.
  • “அசாம் மாநிலத்தில் உள்ள அயலவர்களின் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்காக” 1985 ஆம் ஆண்டில் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 1990 ஆம் ஆண்டில், மத்திய அரசானது பஜ்ரங் நடவடிக்கையினைத் தொடங்கி அதன் மூலம் 1,221 ULFA கிளர்ச்சியாளர்களைக் கைது செய்ய வழி வகுத்தது.
  • அசாம் ‘அமைதியற்றப் பகுதி’ என அறிவிக்கப்பட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) செயல்படுத்தப் பட்டது.
  • 1992 ஆம் ஆண்டில், பின்னர் சரணடைந்த ULFA (SULFA) எனப் பெயரிடப்பட்ட ஒரு பிரிவினர், சரணடைவதற்கும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் முன் வந்தனர்.
  • அரபிந்தா ராஜ்கோவா போன்ற சில ULFA பிரிவினர், ராஜ்கோவா தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு உட்படும் ULFA சார்பு பிரிவு என்று அழைக்கப்படும் பிரிவினர் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்துள்ளனர்.
  • பரேஷ் பருவா தலைமையிலான ULFA -I எனப்படும் பிரிவு சமாதான நடவடிக்கையில் இணையவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்