மத்தியக் கல்வித் துறை அமைச்சர் ‘ULLAS: நவ் பாரத் சக்சார்த்தா காரியக்ரம்’ என்ற ஒரு கைபேசிச் செயலியினை அறிமுகப் படுத்தினார்.
2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவினை ஒட்டி இது அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
இது தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் DIKSHA இணையதளம் மூலம் பலதரப்பட்டக் கல்வி மூலங்களை வழங்கி அதில் கற்பவர்களை ஈடுபடுத்தச் செய்வதற்கான ஒரு எண்ணிம ஊடகமாகச் செயல்படுகிறது.
இது முறையான பள்ளிப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
அவர் இந்தச் செயலியின் முத்திரைச் சின்னம் மற்றும் “ஜன் ஜன் சக்சார்” எனப்படும் அதற்கான முழக்கத்தையும் அறிமுகப் படுத்தினார்.