மாணவர்கள் மத்தியில் தற்கொலையைத் தடுப்பதற்காக பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் (MoE) ஆனது வெளியிட்டுள்ளது.
நல்வாழ்வு சேவைக் குழுக்களை அமைத்தல், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நெறிமுறை வகுப்புகள் மற்றும் மோசமான சூழ்நிலைகளில் உள்ள மாணவர்களுக்காக உடனடி நடவடிக்கை ஆகியவற்றிற்கான 'செயல் திட்டம்' இதில் அடங்கும்.
இந்த வழிகாட்டுதல் ஆனது UMMEED (புரிந்து கொள்ளுதல், ஊக்குவித்தல், நிர்வகித்தல், அனுதாபம், அதிகாரமளிப்பு, மேம்பாடு) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் "உணர்திறன், புரிதல் மற்றும் சுய தீங்கு நடவடிக்கைகள் புகாரளிக்கப்பட்டால் பள்ளி நிர்வாகங்கள் அவர்களுக்கான ஆதரவை வழங்குதல் போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களாக" செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.
பள்ளி முதல்வர் தலைமையில், ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாள்வதில் கவனம் செலுத்தும் வகையிலான ஒரு பள்ளி நல்வாழ்வு சேவைக் குழு (SWT) உருவாக்கப்படும்.
மோசமான சூழ்நிலைகளில் உள்ள மாணவர் யாரேனும் பங்குதாரரால் அடையாளம் காணப்பட்டால், அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தக் குழுவிற்கு அவர் புகாரளிக்க வேண்டும்.