கோட் டி ஐவரி நாட்டில் நடைபெற்ற (மேற்கு ஆப்பிரிக்கா) பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பின் 15வது உறுப்பினர்கள் மாநாட்டில் (COP15) இந்தியா பங்கேற்றது.
COP 15 மாநாடானது, பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய இயக்கமாகும்.
இதற்கான கருத்துரு: 'நிலம். வாழ்வு. மரபு: பற்றாக்குறையிலிருந்துச் செழிப்பினை நோக்கி' என்பதாகும்.
2019 ஆம் ஆண்டின் டெல்லிப் பிரகடனமானது பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பின் 14வது பங்குதார மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.
பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகளின் சபையின் மாநாட்டு அமைப்பானது 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.