TNPSC Thervupettagam
June 9 , 2018 2265 days 686 0
  • ஈக்குவடார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்செஸ் ஐநா பொது அவையின் (United Nations General Assembly) 73-வது கூடுகையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பெண் அமைச்சரான மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்செஸ் ஐநா பொது அவையின் தற்போதைய தலைவரான மிரேஸ்லாவ் லஜ்காக்கினைத் தொடர்ந்து இப்பதவியை வகிக்க உள்ளார்.
  • இவர் ஐநா பொது அவையின் தலைவர் பதவிக்கான போட்டியில் 128 வாக்குகளைப் பெற்றார். மேலும் இவருக்கு ஒரே ஒரு எதிர் போட்டியாளரான ஹோண்டுரோஸ் நாட்டின் ஐநாவிற்கான தூதரான மேரி எலிஸபெத் புளேரஸ் பிளேக் 62 வாக்குகளைப் பெற்றார்.
  • இதன் மூலம் எஸ்பினோஸா கார்செஸ் ஐநா பொது அவைக்குத் தலைமைத் தாங்க உள்ள  நான்காவது பெண் தலைவராக உருவாகியுள்ளார்.
  • ஐநா பொது அவையின் இதற்கு முந்தைய பெண் தலைவர்கள்
    • இந்தியாவின் விஜயலட்சுமி பண்டிட் – 1953
    • லைபீரியாவின் அன்கி எலிசபெத் புரூக்ஸ் – 1969
    • பஹ்ரைனின் ஷேக்ஹா ஹயா ராஷேத் அல் கலிபா - 2006
  • மேலும் ஐநா பொது அவைக்குத் தலைமை வகிக்க உள்ள லத்தின் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த முதல் பெண் மரியா பெர்னான்டா எஸ்பினோசா கார்செஸ் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்