ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNSC - United Nations Security Council) தனது தேர்தலை 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடத்த இருக்கின்றது.
2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான பதவிக் காலத்திற்காக ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளில் இந்தியா வெற்றி பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தப் பகுதியிலிருந்து போட்டியிடும் ஒரே நாடு இந்தியா ஆகும். இந்தியாவின் பெயரானது ஆசியா-பசிபிக் குழுவில் உள்ள அனைத்து 55 உறுப்பு நாடுகளாலும் முன்மொழியப் பட்டுள்ளது.
UNSC தேர்தல்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரங்கில் நடைபெறுகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளும் இரகசிய வாக்கு முறையில் தங்களது வாக்கைச் செலுத்துகின்றன.
பிராந்திய அடிப்படையில் நிரந்தரம் அல்லாத 10 உறுப்பு நாடுகளுக்கான இடங்கள் பின்வருமாறு பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு 5 இடங்கள்
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பகுதி நாடுகளுக்கு 2 இடங்கள்