பன்னாட்டு குழுக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் (UNTOC) 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இத்தாலியில் உள்ள பலேர்மோ நகரில் இரண்டு நாட்கள் அளவிலான மாநாடு நடத்தப் பட்டது.
UNTOC என்பது பன்னாட்டு குழுக் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவி பெற்ற பலதரப்பு ஒப்பந்தமாகும்.
2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இந்தியா 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று இணைந்தது.
இந்த உடன்படிக்கையானது 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.