சமீபத்தில் உத்தரப் பிதேசம் முதல்வர் யோகி ஆதித்ய நாத் UPFPO சக்தி தளத்தினை தொடங்கி வைத்தார்.
இது கோரக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கிசான் கல்யாண் திட்டத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்டது.
இத்தளம் இவ்வகையிலான நாட்டின் முதல் தளமாகும்.
அடிமட்ட நிலையிலுள்ள விவசாயிகளுக்கு பயன் நல்குவதை இத்தளம் நோக்கமாக கொண்டுள்ளது.
விவசாய உற்பத்தியாளர் அமைப்பை மையமாகக் கொண்ட இத்தளம் விவசாயிகள், உற்பத்தியாளர் குழுமங்கள், வணிகர்கள் மற்றும் வேளாண்மை மற்றும் உத்தரப் பிரதேச அரசின் இதர பிற வேளாண் தொடர்பான துறைகள் ஆகியவற்றை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும்.