TNPSC Thervupettagam

V. திருப்புகழ்

November 17 , 2021 980 days 561 0
  • சென்னை நகர்ப்புறப் பகுதியில் வெள்ள அபாயத்தைத் தணித்தல் மற்றும் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் குழுவைத் தலைமையேற்று நடத்தச் செய்வதற்காக ஓய்வு பெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி V. திருப்புகழ் என்பவரை தி.மு.க அரசு நியமித்துள்ளது.
  • இவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர்  நரேந்திர மோடியின் கீழும், பிரதமரான பிறகு தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திலும் பணி புரிந்துள்ளார்.
  • திருப்புகழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி புரிந்த போது 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் வந்த ஒரு குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
  • ‘தமிழ்நாடு வெள்ளங்கள் – கற்றப்  பாடங்களும் & சிறந்த நடைமுறைகளும்’ என்ற ஒரு தலைப்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இவரது குழு மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்