இந்திய அறிவியலாளர் மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப், 2022 ஆம் ஆண்டிற்கான வின் ஃபியூச்சர் சிறப்புப் பரிசினை வியட்நாமின் ஹனோய் எனுமிடத்தில் நடைபெற்ற விழாவில் பெற்றார்.
நிலத்தடி நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் பிற கனரக உலோகங்களை அகற்றுவதற்கான மலிவு விலையிலான வடிகட்டுதல் முறையைக் கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
நுண்ணியப் பொருட்களைப் பயன்படுத்தி மலிவு விலை மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கீட்டு முறைகளை உருவாக்குவதற்கான அவரது பணியைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு முன்னதாக தாமரைத் திரு (பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.