ஜல் சக்தித் துறைக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 8வது WATEC (நீர்த் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு) மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இந்த மாநாடானது இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள டேவிட் இன்டர்கான்டினென்டலில் நடத்தப்பட்டது.
இது நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் தொடர்பான முக்கியப் போக்குகள் மற்றும் தற்போதைய நிலை பற்றிய தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டின் கருப்பொருள், “நீர் மேலாண்மை மற்றும் புத்தாக்கம் - பொறுப்பான திட்டமிடல் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவை குறித்த உலகளாவிய தலைமையை இயக்குதல்” என்பதாகும்.