ஜல் சக்தித் துறை அமைச்சகமானது “நீர் வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறு சீரமைப்பு ‘நீர்வள நாயகர்கள்: உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ (Water Heroes: Share Your Stories)” என்ற போட்டியைத் தொடங்கியது.
மூன்றாவது 'Water Heroes: Share Your Stories' போட்டியானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கியது.
இது MyGov தளத்தில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று முடிவடையும்.
முதல் போட்டியானது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாவது 'Water Heroes: Share Your Stories’ போட்டியானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.