TNPSC Thervupettagam

WHO FCTC உடன்படிக்கையின் 20 ஆம் ஆண்டு நிறைவு

March 4 , 2025 30 days 85 0
  • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பு உடன்படிக்கை (WHO FCTC) ஆனது நடைமுறைக்கு வந்ததன் 20 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடப்பட்டது.
  • WHO FCTC என்பது உலக சுகாதார அமைப்பின் கீழ் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப் பட்ட முதல் பொது சுகாதார ஒப்பந்தமாகும்.
  • இந்த உடன்படிக்கையில் உலக மக்கள்தொகையில் 90% பங்கினை உள்ளடக்கிய 183 நாடுகள் உள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, ஒரு சட்டக் கட்டமைப்பையும், சான்றுகள் சார்ந்த புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விரிவான தொகுப்பையும் வழங்குகிறது.
  • இருப்பினும், இந்தியாவில் 267 மில்லியன் புகையிலைப் பயனர்கள் உள்ளனர் என்ற ஒரு நிலையில் இந்தியாவினை உலகின் இரண்டாவது பெரியப் புகையிலைப் பயனர்கள் கொண்ட நாடாக இது ஆக்குகிறது.
  • இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆனது, 2003 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தடை மற்றும் ஒழுங்குமுறை) என்ற சட்டத்தினால் (COTPA) நிர்வகிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்