மேற்கு வங்காள அரசின் இரண்டு திட்டங்களான “உட்கார்ஷ் பங்களா” மற்றும் “சபோஜ் சாதி” ஆகியவை ஐக்கிய நாடுகளின் தலைமையின் கீழ் தகவல் சமூகம் மீதான உலக மாநாட்டு (WSIS - World Summit on the Information Society) விருதை வென்றுள்ளது.
இந்த WSIS விருதுகள் என்பது தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் சக்தியை மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சி சார்ந்த உத்திகளை நடைமுறைப்படுத்தும் தனி நபர்கள், அரசாங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகளை அங்கீகரிக்கும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.
இந்த நிகழ்வானது முதன்முறையாக 2012 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
உத்கார்ஷ் பங்களா
இது உயரிய விருதைப் பெற்றுள்ளது. இது திறன் வளர்ச்சிப் பிரிவில் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் 6 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக திறன் வளர்ச்சிப் பயிற்சியை அளிக்கும் ஒரு திட்டமாகும்.
சபோஜ் சாதி
இது மின்னணு அரசுப் பிரிவான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டின் கீழ் முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றாக முதன்மைத் திட்டமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் IX முதல் XII வரை பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 1 கோடி மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.