ஆந்திரப் பிரதேச மாநில அரசானது நிதியுதவி அளிப்பதன் மூலம் பெண்களின் நீடித்த வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு திட்டமான “YSR சேயுதா” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொருளாதாரச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பிற்கு ஆதரவளித்தல்
வணிகத்தில் நிதியை முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை அளித்தல்.