TNPSC Thervupettagam
April 8 , 2025 11 days 62 0
  • மத்திய சுகாதாரத் துறையானது, ZooWIN என்ற ஒரு எண்ணிமத் தளத்தினை அறிமுகப் படுத்தி யுள்ளது.
  • நாடு முழுவதும் வெறிநாய்க்கடி நோய்ப் பாதிப்பிறகு எதிரானத் தடுப்பூசிகள் (ARV) மற்றும் பாம்புக் கடி விஷத் தடுப்பு மருந்து (ASV) ஆகியவற்றின் நிகழ்நேரக் கிடைக்கும் தன்மையைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக இது வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • Co-WIN மற்றும் U-WIN தளங்களைப் போலவே, இந்த ZooWIN தளமானது தரவுகளை நன்கு மையப்படுத்தி சுகாதார சேவை வழங்கும் அமைப்புகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடை நலச் சேவைகளை வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
  • உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், வெறி நாய்க் கடி நோய் காரணமாக உலகளவில் பதிவான உயிரிழப்புகளில் சுமார் 36 சதவீதம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
  • கூடுதலாக, பாம்புக் கடியின் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50,000 உயிரிழப்புகள் பதிவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்