TNPSC Thervupettagam
July 1 , 2021 1121 days 730 0
  • பத்திரிக்கையாளர் பலகுமி சாய்நாத் (Palagummi Sainath) என்பவருக்கு 2021 ஆம் ஆண்டிற்கான ஃபுகுயோகா பெருமைமிகு பரிசானது (Fukuoka Grand Prize) வழங்கப் பட்டுள்ளது.
  • இவர் இந்தியாவில் உள்ள வறுமைமிக்க விவசாய கிராமங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஒரு உறுதி மிக்க பத்திரிக்கையாளராவார்.
  • இந்த விருதானது ஜப்பானின் ஃபுகுயோகா நகரம் மற்றும் ஃபுகுயோகா நகர சர்வதேச அறக்கட்டளை ஆகியவற்றினால் நிறுவப் பட்டதாகும்.
  • இந்த விருதானது ஆசிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் ஆற்றும் சிறப்பான பணிகளுக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இவர் 2001 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் போயர்மா என்ற  பரிசினைப் பெற்றவராவார்.
  • மேலும் 2007 ஆம் ஆண்டில் ஆசியப் பத்திரிக்கையியலுக்கு அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக ரமோன் மகசேசே விருதினையும் அவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்