ஃபென்டேல் எரிமலை வெடிப்பு
March 2 , 2025
8 hrs 0 min
47
- எத்தியோப்பியாவில் உள்ள ஃபென்டேல் எரிமலை வளிமண்டலத்தில் மிக அதிக அளவு மீத்தேன் வாயுவினை வெளியேற்றியுள்ளது.
- இந்த எரிமலையானது ஆற்றல் வாய்ந்த பசுமை இல்ல வாயுவின் பெரிய பிழம்புகளை வெளியேற்றியதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வை "பர்ப்" என்று விவரித்து உள்ளனர்.
- இந்த எரிமலை ஆனது ஒரு மணி நேரத்திற்கு 58 மெட்ரிக் டன் மீத்தேன் வாயுவினை வெளியேற்றியுள்ளது.
- மீத்தேன் ஆனது, 100 ஆண்டு காலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு உட்கிரகிக்கும் வெப்பத்தினை விட 28 மடங்கு அதிக வெப்பத்தைத் தேக்கி வைக்கிறது.
- இது உலக வெப்பமயமாதலுக்கு மிக அதிகளவுப் பங்கினை அளிக்கும் இரண்டாவது வாயுவாக உள்ளது.
- இது உலகின் மொத்தப் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வில் சுமார் 11% உமிழ்விற்கு காரணமாகும்.
- ஃபென்டேல் எரிமாலையானது அடிக்கடி வெடிக்காத எரிமலையாகும்.
- கடைசியாக 1820 ஆம் ஆண்டில் தான் இது வெடித்தது.

Post Views:
47