மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தேவி அகல்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது சர்வதேச விமானம் 153 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டுச் சென்றது.
இது கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) விதிகள், 1950-ன் விதி 3ன் துணை விதி (b)ன் கீழ் 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.
இந்த விமான நிலையம் மராத்தியப் பேரரசின் ஹோல்கர் வம்சத்தைச் சேர்ந்த இந்தூரின் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.