நாய்த் தலையன் நீர்ப்பாம்பு (செர்பரஸ் ரின்காப்ஸ்) ஆனது முதன்முறையாக வட கிழக்கு இந்தியாவில் தென்பட்டுள்ளது.
செர்பரஸ் ரின்காப்ஸ் என்பது உவர் நீரில் வாழும் மிதமான அளவிலான விஷமுள்ள, பகுதியளவு நீர்வாழ் இனமாகும்.
பொதுவாக, இந்தப் பாம்பு இனமானது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள சதுப்புநில காடுகள், கடலோர சேறு நிறைந்த பகுதிகள் மற்றும் கழிமுகங்களில் காணப்படுகிறது.
இந்தியாவில், இது குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற சில கடலோரப் பகுதிகளில் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.