அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் தங்களுக்கிடையே எல்லை மோதல் நிகழ்ந்த 12 இடங்களில் ஆறு இடங்களில் 50 ஆண்டு கால எல்லைப் பிரச்சனையைத் தீர்க்க ஒப்புக் கொண்டன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் மற்றும் மேகாலயா முதல்வர்கள் முறையே ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் கான்ராட் சங்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த இரு மாநிலங்களும் 884.9 கிலோ மீட்டர் நீளமுடைய ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.