இந்தியாவின் அமைதிக்கால சிறப்பு விருதான அசோக சக்ரா விருது மறைந்த லான்சு நாயக் நசீர் வாணிக்கு வழங்கப்பட்டது.
மேலும் அசோக சக்ரா விருது வழங்கப்பட்ட முதலாவது காஷ்மீரிய குடிமகன் என்ற பட்டத்தையும் லான்சு நாயக் நசீர் வாணி பெற்றுள்ளார்.
இவர் சோப்பியான் நடவடிக்கையின்போது தனக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதிலும் தனிநபராக இரு தீவிரவாதிகளைக் கொன்றதுடன் மூன்றாவது தீவிரவாதியையும் தாக்கினார்.
அசோக சக்ரா விருதானது போர்க் களத்திற்கு வெளியே வீரம், வீரதீர நடவடிக்கை அல்லது தியாகம் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் இந்தியாவின் உயரிய அமைதிக்கால விருதாகும்.