வெவ்வேறு வகுப்புகளின் இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகப் படுத்தபட்டன.
அஞ்சதீப் என்பது ஆழமற்ற நீர்ப்பரப்பில் இயங்கும் வகையிலான 3வது நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல் (ASWSWC) ஆகும்.
சன்சோதக் 4வது மாபெரும் ஆய்வுக் கப்பல் (SVL) ஆகும்.
கர்நாடாகாவில் கார்வாரில் உள்ள இந்தியக் கடற்படைத் தளமான ஐஎன்எஸ் கடம்பாவின் ஒரு பகுதியாக விளங்கும், இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு தீவின் பெயரால் இதற்கு அஞ்சதீப் என்று பெயரிடப்பட்டது.
1961 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா பகுதியினை இந்தியா திரும்பப் பெற்ற போது அஞ்சதீப் பகுதி தனது வலுவான எதிர்ப்பினைத் தெரிவித்தது.