மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக “அடல் அஹர் யோஜனா” என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவிருக்கிறது. பின்னர் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
அடல் அஹர் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்தில் ரூ.5 க்கு ஊட்டச்சத்து மிக்க உணவு அளிக்கப்படும்.
இதற்கு முன்பிருந்த சிரமேவ் ஜெயதே யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயதிற்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3000 அளிக்கப்பட்டது.