அணைகளின் நிலநடுக்கப் பாதுகாப்பிற்கான தேசிய மையமாக ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (எம்என்ஐடி) அடையாளம் காணப் பட்டு உள்ளது.
நாட்டின் இவ்வகையிலான முதல் மையமாக இது அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையம் அணைகளின் கட்டமைப்பு மற்றும் நிலநடுக்கப் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைக் கையாள்வதில் நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்ய செய்வதற்காக உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்தும்.
நாட்டிலுள்ள குறிப்பிட்ட அணைகளின் எண்ணிக்கை 5,500க்கு மேல் உள்ள நிலையில், அவற்றில் 70 அணைகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.