டார்ஜிலிங்கில் உள்ள இமாலய மலையேறும் சாகச நிறுவனத்தின் குழுவானது ‘அண்டார்டிகா திட்டப் பயணம்’ என்ற பயணத்தினை மேற்கொண்டது.
2021 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், குழுத் தலைவர் ஜெய் கிஷன் தலைமையிலான மூன்று மலையேற்ற வீரர்கள் கொண்ட குழுவினால் மேற் கொள்ளப் பட்டது.
நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் 7,500 சதுர அடி மற்றும் 75 கிலோ எடை கொண்ட தேசியக் கொடியை அக்குழுவினர் ஏற்றினர்.
சிக்கிம் இமயமலையில் 16,500 அடி உயரத்தில் உள்ள ரெனாக் சிகரத்திலும் அவர்கள் கொடி ஏற்றினர்.
ஆசியா சாதனை புத்தகம் மற்றும் இந்தியா சாதனை புத்தகம் ஆகியவற்றில் மலையின் மேல் ஏற்றப்பட்ட மிகப்பெரிய இந்தியத் தேசியக் கொடியாக இது பதிவு செய்யப் பட்டுள்ளது.