TNPSC Thervupettagam

அதிகாரிகள் பரிமாற்ற ஒப்பந்தம்

February 13 , 2018 2349 days 697 0
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே குறிப்பிட்ட காலத்திற்கு பொருளாதார அலுவலக அதிகாரிகளைப் பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (Memoranda of Understanding - MoU) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலிய கருவூல அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் இந்திய மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் (Department of Economic Affairs) அலுவலகத்திலும்; இந்திய பொருளாதார சேவைப் (Indian Economic Service - IES) பணிப்பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி (துணைச் செயலாளர்/இயக்குனர் பணிநிலை) ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆஸ்திரேலிய கருவூல அலுவலகத்திலும் மூன்று மாத காலத்திற்குப் பணியாற்றுவார்கள்.
  • இத்திட்டமானது இரண்டு நாடுகளின் நடப்பு பொருளாதாரக் கொள்கைகளின் சிக்கல்களைப் புரிந்துக் கொள்ளவும், மேலும் பல நிலைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்