TNPSC Thervupettagam

அதிவேக இரட்டை சதம்

December 17 , 2022 580 days 327 0
  • இந்திய வீரர் இஷான் கிஷான், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் எடுத்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அதிவேக இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.
  • கிஷன் வெறும் 126 பந்துகளில் 200 ரன்களை எடுத்தார்.
  • நியூசிலாந்தின் அமெலியா கெர் கொண்டிருந்த முந்தைய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் சாதனையை இவர் முறியடித்தார்.
  • கெர் 2018 ஆம் ஆண்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 134 பந்துகளில் அதிக ரன் எடுத்தார்.
  • மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 2015 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 138 பந்துகளைச் சந்தித்து, ஆடவர் பிரிவுப் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • கிஷானின் இணை- ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோருடன் ஆடவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் இரட்டை சதம் அடிப்பது இது ஒன்பதாவது முறையாகும்.
  • இந்த சாதனையைப் படைத்த 24 வயது இளைய நபர் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்