ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் ஆயுதக் குறைப்பு மாநாட்டிற்கு வேண்டி இந்தியாவிற்கான அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக மூத்த ராஜ்ஜிய அதிகாரி அனுபம் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டிற்கான இந்திய வெளியுறவுப் பணித் தொகுதியினைச் சேர்ந்த ஒரு அதிகாரியான ராய் தற்போது டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
பங்கஜ் சர்மாவினை அடுத்து ராய் இந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.