மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கருத்தில் கொண்டு மாநிலங்களவையில் அனைத்து மகளிர் துணைத் தலைவர்கள் குழுவினை அமைத்துள்ளார்.
நாரி சக்தி வந்தான் ஆதினியம் 2023 என அழைக்கப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிப்பதற்காக மட்டுமே இந்த 13 பெண் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் P. T. உஷா, ஜெயா பச்சன், சரோஜ் பாண்டே, டோலா சென், சுலதா தியோ மற்றும் டாக்டர் ஃபௌசியா கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.