குஜராத்தின் 33 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு தலைமையகத்திலும் ஜியோ நிறுவனம் தனது True 5G கட்டமைப்பு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் முழு அளவிலான 5ஜி சேவைப் பரவலை பெற்ற முதல் மாநிலமாக இது திகழ்கிறது.
மேலும் அந்த நிறுவனமானது, குஜராத்தில் சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில் துறை 4.0 மற்றும் இணைய வசதி சார்ந்தப் பொருட்கள் (IoT) ஆகிய துறைகளில் True 5 ஜி வசதிகளை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்புகளைத் தொடங்க உள்ளது.